Tuesday, December 14, 2010

மேற்கு ஆப்பிரிக்க ஏழை நாட்டில் படு பயங்கர நச்சுக் கழிவை கொட்டிய உலகின் மிகப்பெரிய எண்ணெய் வர்த்தக நிறுவனம்


பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டில் உள்ள அபிஜான் என்ற நகரில், டிராஃபிகுரா என்ற உலகின் 3-வது மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனம், மக்கள் உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடும் தீங்கு விளைவுக்கும் நச்சுக் கழிவுகளை கொண்டு போய் கொட்டியுள்ளது.

இந்த நச்சுக் கழிவினால் ஏற்பட்ட நாற்றத்தினால் பலருக்கு மூச்சுத் திணறலும் அதில் உள்ள உயிருக்கு தீங்கு விளைவிக்கும் அமிலங்களால் இது வரை 15 பேர் மரணமடைந்துள்ளதாகவும் நிரூபிக்கப்பட்ட நிலையில் பசுமை இயக்கத்தினர், அந்த நிறுவனத்தின் மீது நெதர்லாந்தில் கொலைக்குற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை சாற்றி வழக்கு தொடர்ந்துள்ளனர்.


2006ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி, டிராஃபிகுரா நிறுவனம் குத்தகைக்கு விட்டுள்ள புரோபோ குவாலா என்ற கப்பல் சுமார் 100 டன்கள் அளவுள்ள நச்சுக் கழிவுடன் ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்திற்குள் நுழைந்தது. அதாவது ஆம்ஸ்டர்டாம் போர்ட் சர்வீசஸ் என்ற நிறுவனம் இந்த நச்சுக் கழிவுகளை எடுத்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


ஆனால் இந்த நச்சுக் கழிவு எதிர்பா‌ர்த்ததை விட நச்சுத் தன்மை அதிகம் கொண்டிருந்ததால் இந்த நிறுவனம் இதனை எடுத்துக் கொள்ள நிர்ணயித்த விலையில் 20 மடங்கு அதிகரிப்பு செய்தது. இதனால் டிராஃபிகுரா நிறுவனம் கப்பலை வாபஸ் பெற்று மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்டின் முன்னாள் தலை நகரமான அபிஜானில் உள்ள ஒரு கழிவு சுழற்சி நிறுவனத்திற்கு அனுப்ப முடிவு செய்தது.





அங்கு இது உள்ளூர் உரிமம் பெற்ற டாம்மி கம்பெனி என்ற நிறுவனத்திடம் மறு சுழற்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. இந்த நிறுவனம் மறு சுழற்சி செய்யாமல் அதனைக் கொண்டு சென்று வெவ்வேறு இடங்களில் கொட்டியுள்ளது. இந்த நிறுவனம் டிராபிகுரா நிறுவனத்தின் முகவாண்மை நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான நோய்கள் ஏற்பட்டன. 15 பேரின் மரணம் இந்த நச்சுக் கழிவினால் ஏற்பட்ட விளைவுகளே என்று பசுமை இயக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் இயக்கங்கள் இந்த விவகாரத்தை கையிலெடுத்ததோடு டிராஃபிகுராவின் வழிகாட்டுதலின் பேரில்தான் இது வெளியிடத்தில் கொட்டப்பட்டதா என்ற வகையில் விசாரணையிலும் இறங்கியது.


அந்த நச்சுக் கழிவில் மலம், சாக்கடை நீர் உள்ளிட்டவை கலந்திருப்பதால் அதில் சல்ஃபர், ஹைட்ரஜன் சல்ஃபைட் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நச்சு அமிலங்கள் கலந்திருந்ததாக நெதர்லாந்து தேசிய தடயவியல் அமைப்பு கண்டுபிடித்தது.


ஆனால் அந்த நச்சுக் கழிவில் எந்த விதமான அபாய அமிலங்களும் இல்லை, உயிர்க்கொல்லி நச்சுகள் இல்லை என்று வாதாடியது டிராஃபிகுரா நிறுவனம்.


இம்மாதம் 16ஆம் தேதி பி.பி.சி.யில் ஒளிபரப்பப்பட்ட செய்தியில், ஐவரி கோஸ்ட் நாட்டின் அபிஜான் நகரில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவு மிகவும் ஆபத்தானது என்று டிராஃபிகுரா நிறுவனத்திற்கு ஏற்கனவே தெரியும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று அறிவித்தது.


இந்த வழக்கில் தற்போது டிராஃபிகுரா நிறுவனத்தின் மீது கொலைக்குற்றம், மனித விரோதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் லண்டன் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளது.


வழக்கின் ஆதாரமான விஷயம் 15 பேர் உயிரிழந்தது, சுமார் 1 லட்சம் பேருக்கு இனம் புரியாத நோய்கள் ஏற்பட்டது ஆகியவற்றோடு இத்தகைய நச்சுக் கழிவுகளை ஐரோப்பிய யூனியனுக்கு வெளியே எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என்ற அடிப்படையில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.


இந்த வழக்கின் தீர்ப்பு சில வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த நச்சுக் கழிவுகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று பார்த்தால் அதில் டிராஃபிகுரா நிறுவனத்தின் சில மலிவான லாபம் அடையும் உத்திகள் வெளிப்படும்.


மெக்சிகோவில் உள்ள சுத்திகரிப்பு நிறுவனத்திலிருந்து 'கோகர் நாஃப்தா' என்ற கழிவு எண்ணெயை பெரிய அளவில் வாங்கி அதில் காஸ்டிக் சோடாவை கலந்து அதன் பிறகு அதிலிருந்து சுத்தமான எண்ணெயை தயாரிப்பதுதான் டிராஃபிகுராவின் செயல்.


'கோகர் நாஃப்தா'-வை விலைக்கு வாங்குவதன் மூலம் டிராஃபிகுரா நிறுவனம் கார்கோ ஒன்றுக்கு சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர்களை லாபமாக மட்டும் பார்க்கும். காஸ்டிக் தொடர்பான பொருட்கள் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால் அவை தடை செய்யப்பட்டுள்ளன என்பது வேறு கதை. இந்த சுலப வழி லாபத்தை உருவாக்கும் டிராஃபிகுரா நிறுவனத்தின் இந்த செயல்பாட்டினால் விளைந்ததுதான் இந்த அபாயகரமான நச்சுக் கழிவுகள்.


அபிஜான் நகரின் 18 முக்கிய இடங்களில் இந்தக் கழிவு கொட்டப்பட்டுள்ளது. இதனால் மரணங்களும், கருச்சிதைவும், பிறவிக் குறைபாடுகளும் நிகழ்ந்திருப்பது பற்றிய நிரூபணங்கள் உள்ளதாக ஐ. நா. இந்த வாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் செல்பேசிக் குப்பைகள்


புது டெல்லி: தொழில்நுட்ப பயன்பாடு அதிகம் உள்ள ஒரு புதிய செல்பேசியை வாங்கி பழைய செல்பேசியை தூக்கி எறிவது என்பது தற்போதைய நாகரீகத்தின் ஒரு ஆடம்பரமாக விளங்குகிறது. ஆனால் தூக்கி எறியப்பட்ட பயன்படாத செல்பேசிகள் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் அடுத்த ஒரு பூதாகாரம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

2012ஆம் ஆண்டு 8,000 டன்கள் செல்பேசிக் குப்பைகள் சேரும் என்று டெலாய்ட் என்ற உலகளாவிய ஆலோசனை நிறுவனம் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் எச்சரித்துள்ளது.


தூக்கி எறியப்படும் செல்பேசிகள் சுற்றுச்சூழலை நாசம் செய்யும் ஒரு அசுர சக்தியாக உருவெடுத்து வருகிறது என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.


பழைய செல்பேசிகளை பழுது பார்த்து வைத்துக் கொள்ளும் வழக்கம் ஏறக்குறைய இல்லவேயில்லை என்றே கூறிவிடலாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை அதிகரித்து புதிய செல்பேசிகள் நாளுக்கு நாள் அறிமுகம் செய்யப்படும் வேளையில் பழைய செல்பேசிகள் குப்பையாக மாறுகின்றன.


"முறையான மறு சுழற்சி, மறு பயன்பாடு திட்டங்கள் இல்லாததால் நச்சுத் தன்மையுடைய 8000 டன் செல்பேசி குப்பைகள் 2012ஆம் ஆண்டு ஆங்காங்கே கொட்டப்பட்டு சுற்றுச்சூழலை கடும் பாதிப்பிற்குள்ளாக்கும்". என்று டெலாய்ட் ஆலோசனை நிறுவனந்தின் மண்டல நிர்வாக இயக்குனர் பராக் சய்கோங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




பயனற்ற செல்பேசிகளை ஆங்காங்கே நாம் கொட்டும்போது அதிலிருந்து வெளிப்படும் நச்சு நிலத்தடி நீரினுள் ஊடுருவும் அபாயமுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


உலகிலேயே செல்பேசி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியா வெகு வேகமாக முன்னேறி வரும் நிலையில் செல்பேசிக் குப்பைகளை சரிவர அகற்றுவது குறித்த மேலாண்மை அரசு தரப்பிலிருந்து தேவைப்படுகிறது. இல்லையெனில் இது நாட்டின் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று அவர் அபாய மணி ஒலித்துள்ளார்.


ஆசியா, ஐரோப்பா, தென் அமெரிக்க நாடுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய செல்பேசிகளை மாற்றுகின்றனர். இதனால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 மில்லியன் செல்பேசிகள் பயனற்ற குப்பைகளாய் மாறுகின்றன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Monday, December 13, 2010

தெரிந்துகொள்

1)முதலைக்கு உள்ள மொத்த பற்கள்  - 68 பற்கள்.

2)சந்திரனை சுற்றிவந்த முதல் உயிரினம் - ஆமை.

3)தீக்கோழியின் ஆயுட்க்காலம் - 50 ஆண்டுகள்.

4)உலகின் மயொகப்பெரிய பாலூட்டி - திமிங்கலம்.

5)மனித உடலில் வளராத ஒரே உறுப்பு - கண்விழி.

6)கண் இல்லாத ஒரே உயிரினம் - மண்புழு.

7)மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் -  ரிப்ஸ்.

8)தண்ணீர் குடிக்காதவிலங்கு - கங்காரு.

9)அதிக நாள் உயிர் வாழும் உயிரினம் - ஆமை.

10)ஐந்து நதிகள் பாயும் மாநிலம் - பஞ்சாப். 

பிளாஸ்டிக் பாக்கெட்டில் பான் பராக் விற்க தடை



பான் பராக் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அடுத்த ஆண்டு மார்ச் முதல் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விர்க்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் பர பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் மேலாண்மை மற்றும் ஒழிப்புச் சட்டம்"மத்திய அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 


இதில் பான் பராக் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து அடைத்து விற்கப்படுவதால் பொது மக்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும்,அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்கூலி அடங்கிய பெஞ் நேற்று தீர்ப்பளித்தது.


பான் பராக் ,குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை 2011 ம் ஆண்டு மார்ச் முதல் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து அடைத்து விரக்கக்கூடாது,மேலும் புகையிலை பொருட்களின் பாதிப்பு மற்றும் இவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விர்ப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து ,8 வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.







கடந்த 2009 ஆண்டில் கொண்டு வரப்பட்ட "பிளாஸ்டிக் மேலாண்மை மற்றும் ஒழிப்புச் சட்டம்" இதுவரை செயல் படுத்தாதற்க்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.அத்துடன் ,8 வாரத்துக்குள்   இந்த சட்டத்தை செயல் படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதன் பலன்கள்: 
                                   இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதின் மூலம் ஏற்ப்படும் தீமைகளை கீழே உள்ள படங்களில் காணுங்கள்.





பான் பராக்,குட்கா போன்றவற்றை உபயோகப் படுத்துவதை தவிர்ப்போம்.
இவற்றையும் வரவிடாமல் தவிர்ப்போம். 

Monday, December 6, 2010

மாங்க்ரோவ் காடுகளின் பயன்கள்


மாங்க்ரோவ் காடுகளின் பயன்கள்:

                                                                            "கோணமூக்கு உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, மஞ்சள் வாலாட்டி, சோழக் குருவி, நீர் தாழைக் கோழி, நாமக் கோழி, தாமிர இலைக் கோழி, அரிவாள் மூக்கன், செந்நீலக் கொக்கு, கானான் கோழி, பவளக் கொத்தி என உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் வந்து போகும் இடம் இது. இங்கே வளர்ந்து நிற்கிற கோரைப் புல், இயற்கையான பயோ பில்டர். வேண்டாததை உறிஞ்சுவிட்டு, நல்லதை அப்படியே அரணாகப் பாதுகாக்கும். பறவைகள் இதில்தான் கூடு கட்டி வாழும். ஆனால் குப்பைகளைக் கொட்டிக் கொட்டி நச்சு நிலமாக்கிவிட்டார்கள். ஆமை, மீன் போன்ற உயிரினங்கள் மாசுபட்ட நீரிலும் வாழப் பழகிவிட்டன. ஆனால், அதைப் பிடித்து உண்கிற ஏழை மனிதனுக்குத்தான் புதுப்புது வியாதிகள் வருகின்றன" என்கிறார் சூழலியல் ஆர்வலரான திருநாரணன்.

 
தென்னிந்தியாவிலேயே பள்ளிக்கரணை சதுப்பு நிலம், ரொம்பவும் சிறப்பான பகுதி. சதுப்பு நிலமென்றால் ஆறு அடிக்கும் குறைவாக தண்ணீர் இருக்கும், உயிர் வலம் நிறைந்த குழைவான மண்ணுடன் இருக்கும். மாற்ற இடங்களில் உள்ள சதுப்பு நிலத்தில் உப்புத்தன்மை இருக்கும். ஆனால் பள்ளிக்கரணை ஒரு பக்கம் நல்ல தண்ணீர் உள்ள சதுப்பு நிலமாகவும் இன்னொரு பக்கம் உப்புத்தன்மை கலந்த சதுப்பு நிலமாகவும் இருக்கிறது. 114 வகையான பறவைகள், 46 வகையான மீன்கள், 29 வகையான புல் வகைகள், ஆமை, தவளை வகைகள், பாம்புகள், பட்டாம்பூச்சிகள் என வளமான பல்லுயிர் சூழல் நிறைந்த பகுதி.

அடைக்கலமாகும் வேர்கள்:
                                                            
                                                               சுனாமி அலைகளால் உண்டான பேரழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்ள எதிர்காலத்தில் என்னென்ன செய்யலாம் என்று பல தரப்பினரிடம் இருந்து பல சிந்தனைகள் வந்த வண்ணம் உள்ளன. இதில், தமிழகக் கரையோர நெடுகிலும் பெரிய செயற்கைச் சுவர் எழுப்ப முதலமைச்சர் 2500கோடி வேண்டினார் என்று வாசித்தேன் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சதுப்புநிலக் காடுகளையும், மணல் மேடுகளையும் அமைக்கும் குறைந்த செலவினாலான திட்டம் வகுக்கிறார் என்று பி.கே. பாலசந்திரன் என்ற இந்திய ஊடகவியலாளர் இந்தூஸ்தான் டைம்ஸில் எழுதியதையும் வாசித்தேன். சுனாமி அலைகளை தடுப்பதில் செயற்கை சுவர்களை தமிழகக் கடலோரம் முழுவதும் கட்டினால் இயற்கை எழிலிழந்து விடும் என்பதோடு, வளம் பெருகாது, நிலம் பெருகாது, பாதுகாப்புக்கும் உத்தரவாதம் இல்லை என்கின்றார் திருமதி. மேனகா காந்தி. அவருடைய ஆங்கிலக் கட்டுரையில் முத்தான சில வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

"சுனாமி அலைகள் தாக்கிய பிறகு, நமக்கு கிடைத்த அறிவியல் பாடம் ஒன்றே. மணல் மேடுகளை சமப்படுத்தப்பட்ட கரையோரங்களில், பவழப்பாறைகள் உடைத்தெரியப்பட்ட கரைகளில் சேதம் அதிகமாகப் பார்கிறோம். மாலத்தீவில் கரையோரச் சுவர்கள் உதவவில்லையே!. துணைக்கோள் காட்டும் படங்களைப் பாருங்கள்; எங்கெல்லாம் சதுப்புநிலக் காடுகளும், பவழப்பாறைகளும் அழிக்கப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் இந்தியப்பூமியின் நிலப்பரப்பு குறைந்துள்ளது.. இயற்கை தரும் தடுப்புச் சுவர் சதுப்பு நிலக்காடுகள்"

"தமிழகத்தில் பிச்சாவரம் மற்றும் முத்துப்பேட்டை பகரும் பாடத்தை கேட்போம்! இவை ஐந்து கிராமங்கள் கரைக்கு 500 மீட்டருக்கு அருகே உள்ளன. கரையோரம் முழுக்க சதுப்பு நிலக்காடுகள். அலைகள் வத்தாலும், துளி தண்ணீர் கூட கிராமங்களுக்குள்ளே வரவில்லை."

உலகப்புகழ் பெற்ற வேளாணறிவியலாளர் டாக்டர். சுவாமிநாதன், சதுப்புநிலக் காடுகள் பற்றி சொல்லுகிறார், "அடர்ந்த மான்குரோவ் காடுகள் தடுப்புச் சுவர்களென நின்று கரையோர கிராமங்களை காத்துள்ளது! ஒரு கேடயமாக சுனாமியை தன்னகத்தே ஏற்று, அலைகளின் சீற்றத்தைத் தணித்து, அங்கு வாழும் மக்களை காத்துள்ளது". கடலுக்கும், நிலத்துக்கும் இடையே விளையும் தாவரங்கள் தான், மாங்ரோவுகள். அவற்றின் வேர்கள், வண்டல்களை சேர்த்து, நீரோட்டத்தை மிதப்படுத்தி, கடலலைகளால் உண்டாகும் நில அரிப்பை தடுக்கின்றன. நாளடைவில், வேர்கள் சேர்க்கும் வண்டல்களால் கரையோரம் நீட்டப்பட்டு நிலப்பரப்பு கூடுகிறது.

வழிந்தோடும் நீரை உறுஞ்சி, மாங்ரோவ் காடுகள் நிலத்தை, சூராவளி, அலைகள் மற்றும் வெள்ளத்திலிருந்து காக்கின்றது. இந்தக்காடுகள் மாசுக்களை வடிகட்டி, நீரின் தரத்தை உயர்த்துகின்றன. தெளிந்த நீர் கடலுக்குள் ஓடுவதால் பவழப்பாறை சார்ந்த சூழலமைப்பு செழிக்கிறது. மான்குரோவ் காடுகள் கடல் வாழ் உயிரினக்களுக்கு சத்தான உணவையும் தயாரிக்கின்றன. அலைகளால் இந்த உணவு ஆழி மட்டத்தில் உள்ள உயிரினக்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. மீனவனுக்கு மாங்குரோவ் இல்லயெனில், மீனும் இல்லை! எனவே, நாம் கடற்கரையோரங்களை நிலைப்படுத்தி, அரிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டும். கடலையே நம்பி பிழைக்கும் மீனவர்களுக்கு மறுவாழ்வமைப்பதோடு, பேரழிவிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். மாங்குரோவ் காடுகளை மீண்டும் நிறுவதால் இம்மூன்றையும் ஆற்ற முடியும். மாங்குரோவ் நாங்கே ஆண்டுகளில் காடுகளாகி விடும்.

பல அரசாங்கங்கள் மாங்குரோவ்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. பல ஆயிரம் ஹெக்றேர் பரப்பில் மாங்குரோவுகளை மீட்டுருவாக்க குயூபா அரசு மாங்குரோவ் நடும் நிறுவனங்ளை பணியில் அமர்த்தி உள்ளது. பிலிப்பைன்ஸ் நாடு 3000 கிலோ மீ கரையோரத்தில் மாங்குரோவை மீட்டுருவாக்கும் திட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளது. ஜாவாத் தீவில் மீனவர்களுக்கு 4-5 ஹெட்றேர் நிலம் அரசு வழங்கி, 20 சதவீதம் மாங்குரோவ் நட, கட்டாயப்படுத்தி உள்ளது. மீனவர் குடிகளே பெரும்பாலும் பாதிக்கபட்டுள்ளதை காண்கின்றோம். மீன் வளம் குன்றி வரும் நிலையில், மறுபடியும் அவர்களை வறுமையின் விளிம்பில் வைத்திருக்கும் தொழிலை ஆரம்பிப்பதை விட, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாம் அவர்களை ஏன் பிற தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது? முதன்மையாக, மாங்குரோவ் நடுபவர்களாக மாற்றலாமே! இதன் மூலமாக அவர்களுக்கு முறையான நில உரிமையும் வழங்கப்படலாமே!.

அலையாத்திக்காடுகள் (அல்லது) மாங்க்ரோவ் காடுகள்



அலையாத்திக் காடு (அல்லது சதுப்புநிலக் காடு, mangrove) என்பது கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் உவர் நீரில் வளரும் மரங்களும் புதர்ச்செடிகளும் உள்ள காடு. இக்காட்டிலுள்ள மரங்கள் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால் இக்காடுகள் அலையாத்திக் காடுகள் எனப்படுகின்றன. நிலமும் கடலும் சேரும் பகுதிகள் மண்ணும் நீரும் சேர்ந்து சேற்றுப் பகுதியாகவும் சில அடி உயரத்திற்கு நீர் நிறைந்தும் இருக்கும். அலையாத்திக் காடுகள் எனப்படுபவை இவ்வகையான சூழலிலேயே வளர்கின்றன. இதனால் இக்காடுகள் சதுப்புநிலக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.


பொருளடக்கம்:

1 வேறு பெயர்கள்.
2 இந்தியாவில் அலையாத்திக் காடுகள்.


1)வேறு பெயர்கள:
                                    ஆங்கிலத்தில் இவை மாங்குரோவ் காடுகள் எனப்படுகின்றன. மலாய், எசுப்பானியம், போர்ச், சுவிசு மொழிகள் இணைந்த சிறுமரங்கள் எனப்பொருள்படும் மாங்கு என்ற சொல்லில் இருந்தே மாங்குரோவ் காடுகள் என்ற பெயர் ஏற்பட்டது.இக்காடுகளுக்கு வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை கண்டல் காடுகள் எனவும் சதுப்பளக் காடுகள் எனவும் கூறலாம்.

2 )இந்தியாவில் அலையாத்திக் காடுகள்:

                                                                                     கங்கையாற்றுப் படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரிய கண்டல் காடுகள் ஆகும். கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் - இவை தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.

மேலும் குசராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன.