புவி வெப்பமாதல்:
நம் முன்னோர் நமக்கு பத்திரமாக விட்டுச்சென்ற இந்த பூமியை நம் சந்ததிக்கு நாம் பத்திரமாக விட்டுச்செல்ல கடமை பட்டவராவோம்.
இன்னும் நூறு வருடங்களில் பூமியின் வெப்பம் 1 .1C முதல் 6 .4 C வரை உயரும் ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.இதற்கும் மேலும் நாம் விழித்து கொள்ளவில்லை என்றால் வரவிருக்கும் தலைமுறையினர் சொல்ல முடியாத துயரத்தை அனுபவிக்க நேரிடும்.உலகம் முழுவதும் புவி வெப்பத்தால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் .........மேலும் உலகில் உள்ள எல்லா பாகங்களிலும் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.எங்கும் தொழில்மயம் ,அதன் மூலம் நாட்டை வளப்படுத்துதல் ,மின்சார உற்பத்திக்காக எரிக்கப்படும் நிலக்கரி ,பெருகிவரும் மோட்டார் வாகனங்கள் ,இரயில்கள் ,விமானங்கள் இவற்றிற்கு பயன்படுத்தும் பெட்ரோல் ,டீசல் வெளியிடும் புகை,சமையல் எரிவாயு ,ரசாயன உரங்கள் ,குளிர்சாதனப்பெட்டி வெளியிடும் வாயுக்கள் ,இவை அனைத்தும் வளிமண்டலத்தில் நுழைந்து,அதன்மூலம் பூமியை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறது. இதனால் புவி வெப்பம் மிக அதிகமாக உயர தொடங்கிவிட்டது. ஏன் வெப்பமாகிறது ?
மனிதன் தன்னுடைய சுய லாபத்திற்காகவும் ,தனக்கு வேண்டிய சௌகரியதிர்க்காகவும் ,ஆடம்பரதிற்க்காகவும் செய்யும் பலவிதமான காரியங்கள் இன்று மனிதனுக்கு மட்டும் அல்லாமல் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு பேரழிவை ஏற்படுத்திஉள்ளது .இயற்கை நமக்கு சில பாதுகாப்புகளை தந்திருக்கிறது .வளிமண்டலத்தில் இயற்கையாகவே ஆக்சிஜன்,நைட்ரஜன்,ஓசோன் மற்றும் பசுமை வாயுக்களான கார்பன் -டை-ஆக்சைடு,மீதேன்,நைட்ரஸ் ஆக்சைடு போன்றவை உள்ளன.இவற்றில் பசுமை வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உள்வாங்கி தேவையான அளவு வெப்பத்தை பாதுகாத்து பூமியின் மேல் ஒரு போர்வையைப் போல் இருந்து பாதுகாத்து வருகிறது.பசுமை வாயுக்கள் மட்டும் இல்லை என்றால் பூமியும் சந்திரனை போல் ஆகிவிடும்.சந்திரனில் பகலில் 220 டிகிரி F ,இரவில் -234 டிகிரி F வெப்ப அளவுஇருக்கும்.பசுமை வாயுக்கள் குறைவாக இருந்த போது ,அதனால் ஏற்பட்ட சுழற்சி முறைகள் நம்மால் ஏற்று கொள்ள முடிந்தது.ஆனால் பசுமை வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகி விட்டதால் ,அதன் அதிக படியான தாக்கத்தை நம்மால் தாங்க முடியவில்லை. உதாரணமாக பார்த்தால் சித்திரையில் மிகவும் அதிகமான வெப்பம்,ஐப்பசியில் அடை மழை பெய்வதற்கு பதில் பனிமூட்டம் அதிகமாக இருத்தல் ,இப்படி பலவித நிகழ்வுகளை நாம் கண்கூடாககாண்கிறோம்,ஆம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் புவி வெப்பம் 0 . 5 டிகிரியிலிருந்து 1 .0 டிகிரி C வரை உயர்ந்திருக்கிறது.கடந்த நூறு வருடங்களில் உலகம் முழுவதும் 1 டிகிரி F வெப்பம் உயர்ந்திருப்பதாக தேசிய விஞ்ஞான கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.இந்த வெப்பத்தை தாங்க முடியாமல் உலக தட்ப வெப்ப நிலைகளில் பெரிய மாற்றங்களும் , சூறாவளிகளும் ,சுனாமிகளும் ஏற்படுகிறது.பல அரிய உயிரினங்கள் குறைந்தும் ,அழிந்து கொண்டும்வருகின்றன.
வேகமாக உருகி வரும் பனிமலைகள் ,உயர்ந்து வரும் கடல் மட்டம், மாசு நிறைந்த காற்று மண்டலம் இவை எல்லாம் வெப்பத்தின் விளைவுகள்.இவற்றை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வளர்ச்சி என்ற பெயரில் நாம் இயற்கை வளத்தை நிலைகுலையச் செய்து ,இன்று மாறுபட்ட மாசு நிறைந்த ஓர் உலகத்தை உருவாக்கி வருகிறோம்.பருவநிலை தாறுமாறாக மாறி மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகிறது.பூமி சூடேறுவதால் இந்த திடீர் பருவநிலை மாற்றங்கள் என்று அறிவியலாளர்கள்கூறுகிறார்கள்.இவற்றிற்கான காரணம்......சில வருடங்களுக்கு முன் சுனாமி என்ற வார்த்தை உலகையே உலுக்கியது.அதன் காரணமாக ஏற்பட்ட பேரழிவு ஒரு சில இடங்களில் மட்டும் தான். ஆனால் இன்று உலகம் முழுவதையும் மிகவும் பயங்கரமாக அச்சுறுத்தி வரும் ஒரு நிகழ்வு என்ன என்று பார்த்தால்"புவி வெப்பமாதல்" ஆகும்.இன்று மனித சமுதாயம் மட்டும் அன்றி உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அழியும் அபாயம் இருப்பது நமக்கு தெளிவாகதெரிகிறது.
No comments:
Post a Comment