Monday, December 13, 2010

பிளாஸ்டிக் பாக்கெட்டில் பான் பராக் விற்க தடை



பான் பராக் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை அடுத்த ஆண்டு மார்ச் முதல் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விர்க்கக் கூடாது என்று உச்ச நீதி மன்றம் பர பரப்பு தீர்ப்பளித்துள்ளது.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை தடுப்பதற்காக "பிளாஸ்டிக் மேலாண்மை மற்றும் ஒழிப்புச் சட்டம்"மத்திய அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.இது தொடர்பாக உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 


இதில் பான் பராக் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து அடைத்து விற்கப்படுவதால் பொது மக்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும்,அதை தடை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிங்வி மற்றும் கங்கூலி அடங்கிய பெஞ் நேற்று தீர்ப்பளித்தது.


பான் பராக் ,குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை 2011 ம் ஆண்டு மார்ச் முதல் பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து அடைத்து விரக்கக்கூடாது,மேலும் புகையிலை பொருட்களின் பாதிப்பு மற்றும் இவற்றை பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து விர்ப்பதால் ஏற்ப்படும் பாதிப்புகள் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து ,8 வாரத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.







கடந்த 2009 ஆண்டில் கொண்டு வரப்பட்ட "பிளாஸ்டிக் மேலாண்மை மற்றும் ஒழிப்புச் சட்டம்" இதுவரை செயல் படுத்தாதற்க்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.அத்துடன் ,8 வாரத்துக்குள்   இந்த சட்டத்தை செயல் படுத்துவது குறித்து இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இதன் பலன்கள்: 
                                   இந்த போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதின் மூலம் ஏற்ப்படும் தீமைகளை கீழே உள்ள படங்களில் காணுங்கள்.





பான் பராக்,குட்கா போன்றவற்றை உபயோகப் படுத்துவதை தவிர்ப்போம்.
இவற்றையும் வரவிடாமல் தவிர்ப்போம். 

No comments:

Post a Comment